For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பாண்டி. துணை சபாநாயகர் ராஜசேகர உடையார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைக்கு தமிழ்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ராஜசேகர உடையார் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. கந்தசாமி புதிய அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், துணை சபாநாயகர் தேர்வு செவ்வாய்க்கிழமை நடந்தது. சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம், ராஜசேகர உடையார் துணை சபாநாயகராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தப் பதவிக்கு இவர் மட்டுமே போட்டியிட்டார்.ராஜசேகர உடையார் மண்ணடிபேட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, May 30, 2000, 5:30 [IST]