தமிழகத்தில் இன்று
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் - கருணாநிதி
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கியதில் ரூ.10 கோடிக்கும் அதிமாக ஊழல் நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்செல்வகணபதி, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் உள்ளிட்ட 10 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். செல்வகணபதி உள்படமற்றவர்களுக்குத் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் கருணாநிதியின் கருத்து:
கலர் டிவி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்படும்.
ஏற்கெனவே, நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.மேல்முறையீட்டின்பேரில், நிலக்கரி ஊழல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. மேலும், அவ் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக மீண்டும்சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.