மழையால் இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் நிறுத்தம் - நாளை தொடரும்
டாக்கா:
ஆசியக் கோப்பைக்காக இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பலத்த மழைகாரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் புதன்கிழமை தொடரும்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில்பங்களாதேஷை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது.
செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்தது.இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக ஹேமங் பதானி சேர்க்கப்பட்டார். பங்களாதேஷ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
25.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது பலத்த மழை பெய்ததை அடுத்துஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் நடைபெற முடியாத வகையில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள்என்ற நிலையில், பங்களாதேஷ் தனது ஆட்டத்தைப் புதன்கிழமை தொடரும் என்று அம்பயர்கள் அறிவித்தனர்.
பங்களாதேஷ் அணியில் பஷார் 45 ரன்களுடனும், அமினுல் இஸ்லாம் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணியில் டி.குமரன் சிறப்பாகப்பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
யு.என்.ஐ.