For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
ப்ளஸ் டூ தேர்வு: தேர்ச்-சி-யில் மாணவர்களை முந்தி-ய மாணவிகள்

சென்னை:

மூன்றரை லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிளஸ் டூ தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. 83.29 சதவீதம் பேர் இத் தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சகவீதமே அதிகம்.

ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 743 --மாணவிகளில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டுகளைப் போலவே முன்னிலை பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 78.69 சதவீதம்.

இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வு (பிளஸ்டூ) மார்ச் 3 ம் தேதி மு-தல் 25-ம் தேதி வரை வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 1250 தேர்வுமையங்களில் மேல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 798 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். இவர்களில்மாணவர்கள் 1,71,055, மாணவிகள் 1,72,743.

ஒட்டு மொத்தமாக 83.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 79.65சதவீதம்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. மாணவர்களின் கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமும் 74.87சதவீதம். 1999-ல்மா-ண-வி-கள் தேர்ச்சி விகிதம் 84.40 சதவீதம். இவ்வாண்டில் அதை விட கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

60 சதவீதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 301. கடந்த ஆண்டில் இது 1,74,453 ஆகஇருந்தது. அதே போல் பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையும் உ.யர்ந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

இயற்பியல் - 107, வேதியியல் - 648, தாவரவியல் 13, விலங்கியல் 2, கணிதத்தில் 1942, கம்ப்-யூட்-டர் அறிவியல் 170, வணிகவியல் 181,கணக்குப் பதிவியல் 279, பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ் 33 பே-ரும் நூற்-றுக்-கு நூ-று மதிப்பெண் பெற்றுள்ளனர்.

உயிரியல் (பயாலஜி) பாடத்தில் கடந்த ஆண்டில் ஒருவர் முழு மதிப்பெண் பெற்றார். இவ்வாண்டில் ஒருவர் கூட அந்த தகுதியை பெறவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X