தமிழகத்தில் இன்று
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிஜி பிணைக் கைதி விடுவிப்பு
சுவா :
பிஜியில் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் வசம் உள்ளவர்களில் ஒருவர், அவரது சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகபுதன்கிழமை காலை புரட்சிக்காரர்களால் விடுவிக்கப்பட்டார்.
பிஜி ரேடியோ செய்தியில் இது தெரிவிக்கப்பட்டது. பிஜியில் புரட்சிக்காரர்கள் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியையும்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் பிடித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் அதிபர் மாரா ராஜினாமா செய்தார். புரட்சிக்காரர்களின் தலைவர் ஸ்பீட்இந்திய வம்சாவளியினர் பிரதமராக இருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதிபர் மாராவின் மருமகன் ரத்து எபலி நைலதிகாவ் அதிபராக நியமிக்கப்பட்டார். பிஜியில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகின்ற இந்நிலையில்பாராளுமன்றத்தில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரதமர் மகேந்திர பால் செளத்திரியின் அரசில் அமைச்சராகஇருந்த ஆதி எமா தாகிகாகிபா என்பவரின் சகோதரி இறந்து விட்டார்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தாகிகாகிபா விடுவிக்கப்பட்டார். அவர் துப்பாக்கி முனையில் புதன்கிழமை காலை 6.30 மணிக்குவிடுவிக்கப்பட்டார்.
மேலும் தலைநகர் சுவாவில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், பிறரும் ராணுவத்தாருக்கும்,புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடுக்கும் இடையே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையை அடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அந்த ரேடியோசெய்திகள் உறுதிப்படுத்தின.