தமிழகத்தில் இன்று
அரசியல் வெற்றிகள் கிடைக்குமா?
சென்னை:
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஒரே வழி அரசியல் வெற்றிகள் தான்என்பதை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார் ஜெயலலிதா.
முன்னாள் எதிரிகளையும் மடக்கி நண்பர்களாக்கி வருகிறார். இதில் முதல் வெற்றி தமிழ் மாநில காங்கிரசின்ஆதரவைப் பெற்றது தான். கருணாநிதிக்கு ஆதரவளித்து வந்த மூப்பனார் இப்போது ஜெயலலிதாவின் பக்கம்.
அதே மாதிரி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆதரவையும் பெற்றுவிடுவதில் மிகத் தீவிரமாகஉள்ளார்.
தமிழ் மாநில காங்கிரசுக்கு காங்கிரசும் ஆதரவளிப்பது கூட ஜெயலலிதாவுக்கு உற்சாகமான விஷயம் தான்.ஆனால், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் தேர்தலின்போது அதிக இடங்களைக் கேட்டு ஜெயலலிதாவைமூப்பனார் நெருக்குவார் என்கின்றனர் விஷயம் அறிந்தோர்.
ஒரு பக்கம் திமுக, வழக்குகள், மறு பக்கம் சசிகலாவின் கணவர் நடராஜன்-முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்பிரச்சனை என்று ஏகத்துக்கும் சிக்கலில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஒரே ஆறுதல் எப்போதாவது நீதிமன்றங்களில்கிடைத்து வரும் சாதகமான தீர்ப்புகள் தான்.