தமிழகத்தில் இன்று
மத்-தி-ய அமைச்-சர் அ-றை-யில் 2 ஆண்-டு-கள் இ-ருந்-தார் பிர-பா-க-ரன்: ராம-தாஸ்
விழுப்புரம்:
மத்-தி-ய அமைச்-சர் செஞ்-சி ராமச்-சந்-தி-ரன் -எம்.எல்.---ஏ-வா--க இ-ருந்-த-போ-து, அவர-து அறையில் வி-டு-த-லை-ப் பு-லி-க--ளின் தலை-வர்பிர--பா-க-ரன் இரண்-டு ஆண்-டு-கள் தங்-கி-யி----ந்-தார் என்-று பாட்-டா-ளி மக்-கள் கட்-சித் தலை-வர் ராம--தாஸ் கூறி-னார்.
இலங்கை அரசுக்கு இந்திய ராணுவ உதவி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் செவ்-வாய்க்-கி-ழ-மைஉண்ணாவிரதம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து டாக்டர் ராமதாஸ் பேசினார். -அ-வர் பே-சு-கை-யில், இங்குள்ளவர்களுக்கு இலங்கையில் என்னபிரச்சினை என்று தெரியவும் இல்லை. தெரிந்து கொள்கிற ஆர்வமும் இல்லை. சிலர் இலங்கையை கூறு போடுகின்றனர்.
சில தலைவர்கள் உலக நாடுகள் எப்படி போனாலும் கவலை இல்லை. இலங்கையில் ஐக்கியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையேவலியுறுத்துகின்றனர். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
போராளி குழுக்களை அப்பொழுது எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தனர். இந்திரா காந்தி காலத்தில் பயிற்சி முகாம்களை அமைத்துஅவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தார். எம்.ஜி.ஆர். தெரிந்தும், தெரியாமலும் வாரி வழங்கினார். தன்னுடைய பிறந்தநாளின் பொழுது தொண்டர்கள்வழங்கிய நிதியினை கருணாநிதி போராளி குழுக்களுக்கு பிரித்து கொடுத்தார்.
1983-ல் போட்டி போட்டுக் கொண்டு மாநாடு நடத்தினார்கள். தற்போதைய மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன் எம்,எல்.ஏவாக இருந்தபொழுது அவருடைய அறையில் இரண்டாண்டுகள் பிரபாகரன் தங்கி இருந்தார். அன்று அவர்கள் சொல்லாததையா, செய்யாததையா இன்று நாங்கள்செய்கிறோம்.
இன்று இப்பிரச்சனைபற்றி பேசுவதற்கு பா.ம.க., ம.தி.மு.க.வை விட்டால் வேறு யாரும் இல்லை. இப்போது புதிய தமிழகமும் வந்துள்ளனர்.அவர்களையும் வரவேற்கின்றோம்.
இன்று தமிழ், தமிழன் என்ற முகவரியை பிரபாகரன் கொடுத்துள்ளார். இந்த இனத்தை அறிமுகப்படுத்தியது பிராபாகரன். அதற்கு தமிழீழம்அமையுமானால், அது இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடாகத்தான் இருக்கும் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.