276 ரன்கள் குவித்-த-து: -ச-தம் அ-டித்-தார் கேப்டன் ஜெயசூர்யா
டாக்கா:
இந்தியாவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள்எடுத்தது. கேப்டன் சனத் ஜெயசூர்யா சதமடித்தார்.
டாக்காவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. வழக்கம் போல ஜெயசூர்யாவும், அரவிந்த டிசில்வாவும்துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துக்களை அவர்கள் அடித்து ஆடி ரன்கள் குவித்தனர். ஆனால், 23 ரன்கள் எடுத்திருந்தபோது அரவிந்த டிசில்வாஅவுட்டானார். அடுத்து களமிறங்கிய அட்டபட்டு, ஜெயசூர்யாவுடன் சேர்ந்தார்.
இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு உயர்த்தினர். பின்னர் 42 ரன்கள் எடுத்த நிலையில்அட்டபட்டு அவுட்டானார். அடுத்து வந்தவர்களில் கலுவிதரனா, வாஸ் ஆகியோர் தவிர மற்றவர்கள் நின்று ஆடவில்லை.
கேப்டன் ஜெயசூர்யா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 105 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் டெண்டுல்கர், அகர்கர் இருவரும் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினர்.