For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் உண்ணாவிரதம்

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாநில அரசு விருந்தின் மாளிகை முன்பு உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதம் இருந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் மோதி வரும் இலங்கை ராணுவம்உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கோரிக்கை விடுக்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மூன்று முறை போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் இவற்றை இலங்கை அரசு மதிக்கவில்லை. இந்தப் பிரச்சினையில் சர்வதேச ஆதரவுடன்இந்தியா தலையிட வேண்டும்.

இலங்கைக்கு செயற்கைக் கோள் மூலம் இந்தியா உதவி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த மாதிரியான உதவியை இந்தியா உடனடியாகநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராஜேந்திரன்ஆகியோரும் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X