தமிழகத்தில் இன்று
ஆண்டுக்கு ஒரு மாடல் அ-றி-மு-கப்-ப-டுத்-த மாரு-தி நி-று-வ-னம் மு-டி-வு
புனே:
நடப்பு நிதி ஆண்டில் மூன்று புதிய மாடல்களில் கார்கள் தயாரிக்க மாருதி உத்யோக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு புதிய மாடல்கார் தயாரிக்கவும் அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜகதீஷ் கட்டார் கூறியதாவது:
மாருதி உத்யோக் நிறுவனம் பல வகைகளில் கார்களைத் தயாரித்து வருகிறது. மாருதி வகைக் கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.ஆகவே, நடப்பு நிதி ஆண்டில் 3 புதிய மாடல்களில் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் மாடல் கார் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் புதிய மாடல் கார் அறிமுகப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள 3 மாடல்களில் ஒன்று பெரிய வகைக் காராகும். மற்ற இரண்டில் ஒன்று சிறிய வகையையும் மற்றொன்று நடுத்தரவகையையும் சேர்ந்தது.
மாருதி நிறுவனம் தனது டீலர்கள் மற்றும் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் 178 டீலர்கள் உள்ளனர்.இந்த ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை 210 ஆக உய்ர்த்தப்படும். அதே போல், தற்போதுள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 1500-லிருந்து 2,250-ஆகஉயர்த்தப்படும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பணிமனையை வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலைகளில் இத்தகைய பணி மனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும். அது தவிர,மைசூர்-பெங்களூர், டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலைகளிலும் இத்தகைய பணி மனைகள் விரைவில் அமைக்கப்படும் என்றார் கட்டார்.
யு.என்.ஐ.