தமிழகத்தில் இன்று
பிஜியில் ஸ்பைட்-- ராணுவத் தளபதி பேச்சுவார்த்தை
சுவா:
பிஜியில் தலைநகர் சுவாவில் புரட்சியாளர் ஜார்ஜ் ஸ்பைட் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ராணுவத் தளபதிபிராங்க் பெய்னாமாராமை சந்திக்கவுள்ளார்.
பிஜியில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஸ்பைட் ராணுவத்துடன்பேசுவது இதுவே முதன்முறையாகும்.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிக் கும்பல் ஒன்று கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் புகுந்துபிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பலரைச் சிறைப்பிடித்து வைத்துள்ளது. இதையடுத்து ராணுவம் பிஜியைத் தனதுகைக்குள் கொண்டு வந்தது.
பிஜியில் இடைக்கால அரசு அமைப்பதற்கு முன் ராணுவ கவுன்சில் தனது எல்லா நடவடிக்கைகளையும் முடித்துவிடவேண்டும் என்று கவுன்சில் தலைவர் பிராங்க் பெய்னிமாராமா விரும்பினார்.
ஆகவே, இடைக்காலப் பிரதமராக ராடு எபேலி நெய்லாடிகா அறிவிக்கப்பட்டதை புரட்சிப் படையினர் ஏற்காததைஅடுத்து அந்த அறிவிப்பை ராணுவ கவுன்சில் விலக்கிக் கொண்டது.
இந்நிலையில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் ராணுவத் தளபதி பிராங்க் பெய்னாமாராமை சந்திக்கமுடிவுசெய்துள்ளார்.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஹோவர்டு போலிடிமி நிருபர்களிடம் இத்தகவல்களைக் கூறினார். பிஜியில் கடந்ததிங்கள்கிழமை நாங்கள் ஆட்சியைப் பிடித்துள்ளோம்.
முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை பிஜியில் ராணுவத்தினரும், புரட்சிக்காரர்களும் நாடாளுமன்றத்தில்அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்றார்.
முன்னதாக பிஜி பாராளுமன்றத்தின் முன் கூடியிருந்த மக்களை விரட்ட முயன்ற போலீஸ்காரர் ஒருவரைஅங்குள்ள கும்பல் ஒன்று தாக்கியது. இதையடுத்து அங்குள்ள கூட்டத்தில் பெரும்பாலானவர்களைப் போலீசார்கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சின்ன கலவரத்தைத்தவிர பிஜியில் அமைதி நிலவி வருகிறது. காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் இந்திய விற்பனையாளர்கள் யாரும்வரவில்லை.