கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இந்-தி-ய பெட்ரோலியத் துறை தனியார் கையில் -போ--கா-து
மும்பை:
பெட்ரோலியத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள எண்ணெய் கிணற்றில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியைஅதிகரிக்க எண்ணெய் கிணற்றை மேம்படுத்துவது குறித்து நாடாளுமன்ற ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெட்ரோலியத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. அதற்கான தேவையும்இப்போதைக்கு இல்லை. பெட்ரோலியத் துறை என்பது நாட்டின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்துறையாகும். ஆகவே அத் துறையில் தனியாரை உடனடியாக ஈடுபடுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை.
நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் நல்ல லாபத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும்,முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபத்தைப் பங்கிட்டு கொடுக்கின்றன. ஆகவே, பெட்ரோலியத் துறைஇப்போதைக்கு தனியார்மயமாக்கப்படாது.
மும்பையில் உள்ள எண்ணெய் கிணற்றை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடியை முதலீடு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இக் கிணற்றில் இருந்துதான் நாட்டின் மொத்த குரூட் ஆயில் உற்பத்தியில்70 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.