தமிழகத்தில் இன்று
மகேந்திர செளத்ரி திங்கள்கிழமைக்குள் விடுதலை: ஜார்ஜ் ஸ்பீட் அறிவிப்பு
சுவா:
பிஜியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் உரிமையை பிஜி பழங்குடி தலைவர்களிடம் ஒப்படைக்க பிஜி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும்ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
மே 19-ம் தேதி பிஜித் தீவில் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள், மகேந்திர பால் செளத்ரியின் ஆட்சியைக் கவிழ்த்ததன் மூலம் ஏற்பட்டகுழப்பத்திற்கு இதன் மூலம் முடிவுக்கு வரவுள்ளது.
ஸ்பீட் ஆட்சியைக் கவிழ்த்த சில நாட்களில் தலைநகர் சுவாவில் வன்முறை மூண்டது. இதையடுத்து அதிபர் மாரா ராஜினாமா செய்து விட்டுதலைமறைவானார். ராணுவத் தளபதி ஆட்சியைப் பிடித்தார். இடைக்கால பிரதமரையும் அவர் அறிவித்தார். ஆனால் அவரை ஏற்க ஜார்ஜ் ஸ்பீட்மறுத்தார். தானே ஆட்சியில் நீடிப்பேன் என்றும் அறிவித்தார். இதனால் குழப்பம் நீடித்தது. இதையடுத்து இடைக்கால பிரதமரை ராணுவத் தளபதி வாபஸ்பெற்றார். அவருக்கும், ஸ்பீடுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த நிலையில், இப்பிரச்சினைக்கு பழங்குடித் தலைவர்கள் அடங்கிய பிஜிக் கவுன்சில் முடிவு காண, புரட்சிக்காரர்களும், ராணுவத் தலைமையும் ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமைக்குள் புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள மகேந்தரி செளத்ரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்என்று தெரிகிறது.
வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் பைனமராமா இருவரும் காவா என்ற மிதமான போதை கொண்டபானத்தை அவர்கள் சேர்ந்து அருந்தினர். பிஜித் தீவில் இந்தப் போதைப் பொருள் பானம் மிகவும் பிரசித்தமானது.
பின்னர் ஜார்ஜ் ஸ்பீட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழங்குடித் தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு, பிஜித் தீவு பிரச்சினைக்கு முடிவு காணப்படும். அதற்கு முன்பினைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர். திங்கள்கிழமை பழங்குடித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். அதற்குள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிடுவர்.
அனைத்துப் பிரச்சினைக்கும் விரைவில் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பிரச்சினைகள் அனைத்தும்தீர்ந்து விடும் என்றார்.