தமிழகத்தில் இன்று
30 சதவீத வளர்ச்சியை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனம் இலக்கு
டெல்லி:
நடப்பு ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனத்தின் இந்திய பிரிவு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத் தகவலை அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கசுவூ ஓகிஷிமா நிருபர்களிடம் கூறியதாவது:
நேஷனல் பானசோனிக் நிறுவனம் இந்த ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் புதியமின்னணுச் சாதனங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வகைச் செல்போன்கள் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் திட்டங்கள் மூலம் இந்திய மின்னணுப்பொருட்கள் சந்தையில் 10 சதவீதத்தை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது உலக நாடுகளில் சிறந்த மார்க்கெட்டாக இந்தியா விளங்குகிறது. அதாவது அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகமின்னணுப் பொருட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது இந்தியாவில்தான். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் கலர் டிவிக்கள் விற்பனைசெய்யப்படுவதை வைத்து இந்தியாவின் மார்க்கெட் மதிப்பைக் கணக்கிடமுடியும் என்றார் ஓகிஷிமா.
யு.என்.ஐ.