தமிழகத்தில் இன்று
புதிய அவதாரம் எடுக்கிறார் ரேவதி
சென்னை:
நடிகை ரேவதி புதிதாக டெலிபோட்டோ என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் என்ற டி.வி.நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.
மண் வாசனையில் அறிமுகமாகிய ரேவதி தற்போது டி.வி. தொடர்களில் நடித்துவருகிறார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் கடைசியாக அவர் நடித்திருந்தார்.சினிமாக்களில் நடிப்பதை கிட்டத்தட்ட குறைத்து விட்ட ரேவதி தற்போது தனது கணவர்சுரேஷ் மேனனுடன் சேர்ந்து புதிய டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தைத்துவக்கியுள்ளார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே ரேவதி நடிக்க சில தொடர்களை தயாரித்துள்ளது. தற்போதுநிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ரேவதி ஏற்றுள்ளார். புதிய பொறுப்புக்குப் பின்செய்தியாளர்களிடம் ரேவதி பேசுகையில், சினிமாவை விட வியாபாரம் கடினமானது.இருந்தாலும் எளிதாகவே உள்ளது என்றார்.
டெலிபோட்டோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பொது மக்களின் பங்குத்தொகையாக 27,50,000 சம பங்குகளைக் கொண்டிருக்கும். ஒரு பங்கின் விலை ரூ. 10ஆகும். இதன் மூலம் ரூ. 2.75 கோடி நிதி திரட்டப்படும்.
இந்த நிறுவனத்தின் மூலம் ரூ. 3.15 கோடி மதிப்பில் அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல்எபக்ட்ஸ் ஸ்டுடியோ நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குசெஞ்சுரியன் வங்கி பாதியளவு நிதியுதவி செய்யவுள்ளது.
யு.என்.ஐ.