தமிழகத்தில் இன்று
"டீசல் விற்-ப-னை ஏ--ய்ப்-பு கு--றித்-து ஆராய கமிட்-டி
சென்னை:
டீசல் மீதான விற்பனை வ-ரி ஏய்ப்பு குறித்து ஆராய தனிக் கமிட்டி அமைக்கப்படும்என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி சென்னையில்சனிக்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்குபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டீசல் மீது விதிக்கப்படும் விற்பனை வரி ஏய்க்கப்படுவது பற்றி அரசு அறிந்துள்ளது.இதுபற்றி பிரதமர் வாஜ்பாயும் அறிந்துள்ளார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கைஎடுக்க திட்டமிட்டுள்ளோம்.
வரி ஏய்ப்பு பற்றி விசாரிப்பதற்காக மத்திய பெட்ரோலியத் துறை சார்பில் கமிட்டிஒன்று ஏற்படுத்தப்படும். இக்கமிட்டி விற்பனை வ-ரி எந்த வகையில் ஏய்க்கப்படுகிறதுஎன்பதை கண்டறியும். அதனடிப்படையில் மத்திய அரசின் -நடவடிக்கை அமையும்.
குஜராத் மா-நிலத்தில் பொதுத் துறையை சேர்ந்த சில எண்ணெய் -நிறுவனங்களில்சி.பி.ஐ. அதிரடிச் சோதனை -நடத்தியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது பற்றிஅரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜூன் 30-ம் தேதிக்குள் விலை உயர்வுஇருக்குமா என்பதை அறிந்த பிறகே இந்தியாவில் விலை உயர்வு பற்றி மத்திய அரசுமுடிவெடுக்கும் என்றார்.