தமிழகத்தில் இன்று
அட்லாண்டிக் கடலில் இரு கப்பல்கள் மோதல்
பனாமா சிட்டி:
அட்லாண்டிக் பெருங்கடலில், பனாமா கால்வாய்க்கு அருகே இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின.இதனால், கப்பல்களில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டி கடலின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் சிட்னி ஸ்டார் கண்டெய்னர் கப்பலும், பனாமா நாட்டின் ராயல் ஓஷன் கண்டெய்னர்கப்பலும் பக்கவாட்டில் உரசிக் கொண்டன. அட்லாண்டிக் கடலில் இருந்து பனாமா கால்வாயை நோக்கி இக்கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று உரசிக் கொண்ட கப்பல்கள், பனாமா கால்வாயின் நுழைவாயில்இருந்த எண்ணெய் டேங்களின் மீது மோதின.
இதனால் டேங்கர்கள் உடைந்து கடலில் எண்ணெய் கொட்டியது. கடலில் கொட்டிய எண்ணெய்யின் அளவுதெரியவில்லை. இருப்பினும், மிக அதிக அளவில் எண்ணெய் கடலில் கொட்டி வீணானதாக அதிகாரிகள்தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு இவ் விபத்து நடந்துள்ளது.
தற்போது இரு கப்பல்களும், பனாமா கால்வாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. இவ் விபத்தில் யாருக்கும் காயமில்லை.