For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இஸ்ரேலிடமிருந்து நவீன போர்க் கப்பல் வாங்குகிறது இலங்கை

கொழும்பு:

இஸ்ரேலிடமிருந்து நவீன போர்க் கப்பல் வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது.

இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வட பகுதியில் இலங்கைராணுவத்தின் கடற்படையை விட புலிகளின் கடற்படை வலுவானதாக உள்ளது.

இதனால், புலிகளின் கடுமையான தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் கடற்படைதளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புலிகளுக்கு இணையாகதனது கடற்படையையும் வலுவானதாக்க நவீன போர்க் கப்பலை வாங்க இலங்கைஅரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரேல் அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தியுள்ளது. அதன்அடிப்படையில், விரைவில் இலங்கை கடற்படையில் நவீன போர்க் கப்பல்சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க் கப்பல்கள் நிறுத்தும் வசதியும், சுமார் 36 கிலோமீட்டர் தூரம் உள்ளஇலக்கையும் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பொறுத்தும் வசதியும் இக் கப்பலில்இருக்கும். இக் கப்பலின் மூலம் புலிகளின் கடற்படைத் தளங்களையும், கடலோரம்உள்ள மறைவிடங்களையும் தாக்கி அழிக்க முடியும் என்று இலங்கை ராணுவம்கருதுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X