தமிழகத்தில் இன்று
பொள்ளாச்சி அருகே ரூ. 32 கோடி செலவில் காஸ் நிரப்பும் ஆலை
கோவை:
பொள்ளாச்சி அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ. 32 கோடி செலவில் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திரவ பெட்ரோலியம் சமையல் எரிவாயு நிரப்பும்திட்டத்தைத் துவக்கியுள்ளது.
ரூ 32 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த எரிவாயுத் திட்டத்திற்கு 32 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிய இலந்தை என்றகிராமத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலையில் நாள் ஒன்றிற்கு 7 ஆயிரம் சிலிண்டர் காஸ் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநயோகிக்கப்படும்.
இங்கு நிரப்பப்படும் காஸ், கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கேரள மாநிலப் பகுதிகளிலும்விநயோகிக்கப்படும்.
பொதுமக்களுக்கு காஸ் விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவே இந்த தொழிற்சாலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசிடமிருந்து 32 ஏக்கர் நிலத்தை ரூ.20.7 லட்சத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாங்கியுள்ளது. இதற்கான காசோலை கோவைமாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொழிற்சாலை செயல்படத் துவங்கும்.