For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனத்தைக் கைது செய்ய அன்பரசு கோரிக்கை

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து கம்ப்யூட்டர் போன்ற கருவிகளைஎடுத்துச் சென்று விட்ட முன்னாள் தலைவர் திண்டிவனம்ராமமூர்த்தியைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் அன்பரசு கூறியுள்ளார்.

சென்னையில் புதன் கிழமை அன்பரசு வெளியிட்ட அறிக்கையில் திண்டிவனம் ராமமூர்த்தியை கைது செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் காங்கிரஸ் மேலிடம் தந்தது. அதை எடுத்துச் சென்றது தொடர்பாக திண்டிவனம்ராமமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அன்பரசு புகாருக்கு, விளக்கம் அளித்துள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, ""கட்சி அலுவலகம் என்று அவர்கள் எல்லாரும் கூறும்அலுவலகம் நான் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தது.

நான் எனது சொந்த பணத்தில் அந்த அலுவலகத்தை நடத்தி வந்தேன். இப்போது என் பதவி பறிக்கப்பட்டு விட்டது. எனவே அந்தஅலுவலககத்தை காலி செய்து விட்டேன். வீட்டு உரிமையாளரிடம் அலுவலகத்தை ஒப்படைத்து விட்டேன்.

புதிதாக பொறுப்பேற்றவர்கள் சொந்தமாக அலுவலகம் நடத்திக் கொள்ளட்டும். நான் செய்ததில் எந்த தவறும் இல்லை.

என் மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுவது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. விளக்கம்கேட்டு நோட்டீஸ் கூட வரவில்லை.வந்தால் என்னுடைய பதிலை அளிக்கத் தயார். மேலும் நான் சோனியா காந்தியை பற்றி எந்தபுகாரும் கூறவில்லை.

அவரது தலைமையில் தொடர்ந்து நான் காங்கிரசில் செயல்படுவேன் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X