For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி சஸ்பெண்ட்

லண்டன்:

காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி தீவு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

காமன்வெல்த் அமைப்பின் எட்டு உறுப்பினர் கொண்ட காமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுகூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது. காமன்வெல்த் அமைப்பின் முக்கியக் கவுன்சில்களிலிருந்து இதன்மூலம் பிஜி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிஜி மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக எந்தமுடிவையும் காமன்வெல்த் எடுக்கவில்லை.

பிஜியில் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவர்களுடன் உள்ள29 அமைச்சர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் குழு, தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.

பினைக் கைதிகளை நீக்குவதற்கும், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பிஜிக்குஉயர் மட்டக் குழு ஒன்றை அனுப்பவும் காமன்வெல்த் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மே 19 ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் செளத்ரி மற்றும் பலரை ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலானபுரட்சிக்காரர்கள் சிறை பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இப்போது யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத அளவுக்குபிஜியில் குழப்பம் நிலவுகிறது.

பிஜி நிலவரம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில்,பிஜியில் நடக்கும் கலவரம் மிகவும் மோசமானது. அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சனைகள் ஏறபட்டுவருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கும் ஆபத்து உள்ளது. இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு,சமோவா, டோங்கா நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

இந்த சமயத்தில் பிஜி குறித்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காமன்வெல்த்கூட்டமைப்பிலிருந்து பிஜியை நீக்குவதே சரியான தீர்வு என்றார்.

ஏற்கனவே, 1987 ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தபோது, பிஜி காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.பின்னர் 1997-ல் மீண்டும் சேர்க்கப்பட்டது.

காமன்வெல்த்தால் எதுவும் செய்ய முடியாது: ஸ்பீட்

காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி நீக்கப்பட்டது குறித்து புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் பி.பி.சி.டிவிக்கு அளித்த பேட்டியில், இங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு காமன்வெல்த் நாடுகள் எதுவும் செய்ய முடியாது.பிரதமர் செளதிரி உள்பட அமைச்சர்கள் பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளோம்.

பிஜி மக்கள் மிகவும் தலைநகர் சுவாவில் நிலவும குழ்பத்தால் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எங்கள்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாங்கள் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X