ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ஆரம்ப சுகாதார நலப் பணிகளுக்கு ரூ.375 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
டெல்லி:
பிரதமரின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆரம் சுகாதார நலப் பணிகளுக்குக்கூடுதலாக ரூ.375 கோடியை திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறைந்தது ஆரம்ப சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையில் திட்டங்களைச்செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கப்படும். அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ஆரம்பர பொது சுகாதாரமையங்களை வலுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமும், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரவசதிகள் கிடைக்க நடமாடும் மருத்துவமனை அமைக்க 30 சதவீதமும் செலவிடப்படும்.
மீதமுள்ள 30 சதவீத நிதி, சிறிய மகப்பேறு மருத்துவமனைகள் கட்டப்படும். அனைத்து கிராமங்களிலும் மருந்தகம்உள்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.