தமிழகத்தில் இன்று
மண்டபம் முகாமிலிருந்து -அ-க-தி-கள் இடமாற்றம்
சென்னை:
ராமேஸ்வரத்தில் மண்டபம் முகாமிலிருந்து 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் தமிழர்கள்அகதிகளாக அங்கிருந்து படகுகள் மூலம் தப்பி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்திற்கு தொடரந்து வந்த வண்ணம் உள்ளனர்.
ராமேஸ்வரத்திற்குத் தப்பி வரும் அகதிகள் அனைவரும் அங்குள்ள மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் வரத்து நாளுக்குநாள்அதிகரித்து வருவதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள அகதிகளில் சிலர் கோவை, சேலம், கன்னியாகுமரிக்குமாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்திற்கு 969 பேரும், சேலம் மாவட்டத்திற்கு 542 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 374 பேரும் கடந்த மாதம்மாற்றப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை 125 குடும்பங்களைச் சேர்ந்த 86 குழந்தைகள் உள்பட 413 பேர் திருவண்ணாமலை மாவட்டம் வேளப்பாடி முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.