தமிழகத்தில் இன்று
மும்பையில் பார்வையற்றோருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
மும்பை:
மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன், மும்பையில் பார்வையற்றோருக்கான கம்ப்யூட்டர் பயிற்சிமையத்தை இந்திய பார்வையற்றோர் கழகம் நிறுவியுள்ளது.
பென்டியம்-2 கம்ப்யூட்டர்கள், மல்டி மீடியா சாதனங்கள், ஸ்கேனர்கள், பிரின்டர்கள் மற்றும் அதி நவீன நெட்வொர்க் வசதிகளுடன் இந்த மையம்அமைந்துள்ளது.
பார்வையற்றோருக்கென விசேஷமாக உருவாக்கப்பட்ட புரோ பிரெய்லி பிரின்டர், கலிலியோ டெஸ்ட் ரீடர், பிரெய்லி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர்,கிராபிக்ஸ் கருவிகள் ஆகியவையும் இந்த மையத்தில் உள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் வின்டோஸ் அடிப்படையில் செயல்படும் ஸ்க்ரீன் ரீடிங்சாப்ட்வேரான, ஜாஸ் எனப்படும் சாப்ட்வேரும் இந்த மையத்தில் உள்ளது.
இந்திய பார்வையற்றோர் கழக தலைவர் ராமகிருஷ்ணா மையம் குறித்துக் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த பார்வையற்றோருக்கு இந்த யைம் பெரும்வரப்பிரசாதமாக அமையும். இதுபோன்ற கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மும்பையில் இதுவரை இல்லை. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றபார்வையற்றோரின் தீராத தாகத்திற்கு வடிகாலாக இந்த மையம் அமையும்.
கம்ப்யூட்டர் கல்வி தவிர இன்டர்நெட் பயன்பாடு குறித்தும் இந்த பயிற்சி மையத்தில் சொல்லித் தரப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.