யூரோ கால்பந்து போட்-டி-யில் யூகோஸ்லேவியா பங்-கேற்-க வாய்ப்-பு
பிரஸ்ஸல்ஸ்:
பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளில் இம்மாதம் நடைபெறவுள்ள யூரோ-2000 கோப்பைக் கால்பந்துப் போட்டியில், யூகோஸ்லேவியா அணி கலந்துகொண்டால் வரவேற்போம் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு கொசாவோ பிரச்சினை பெரிதானதையடுத்து யூகோஸ்லேவியா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்தது. இந்த நிலையில்,யூரோ-2000 போட்டியில் யூகோஸ்லேவியா கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகார ஆணையர் கிறிஸ் பேட்டனின் செய்தித் தொடர்பாளர் குன்னார் வேகன்ட் இதுகுறித்துக் கூறுகையில்,யூகோஸ்லேவியா, யூரோ-2000 கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை.
இருப்பினும், யூகோஸ்லேவியா மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடைகள் காரணமாக அந்த அணியை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பதும்,அனுமதிக்காததும், போட்டியை நடத்தும் பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளின் முடிவுக்கே விட்டு விட விரும்புகிறோம்.
யூரோ-2000 போட்டியை நடத்துவது கால்பந்துப் போட்டிகளின் தலைமையகமான சர்வதேச கால்பந்துக் கழகம்தான். இது சுவிட்சர்லாந்திலிருந்துசெயல்படுகிறது. இதற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இக்கழகம் யூகோஸ்லேவிய அணியை போட்டியில் கலந்து கொள்ளஅனுமதித்தால் அதை நாங்கள் எதிர்க்க முடியாது. மாறாக வரவேற்கிறோம் என்றார் அவர்.
பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் கொசாவோ இனத்தவர்கள், யூகோஸ்லேவிய அணியை இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றுவற்புறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெல்ஜியம் நீதிமன்றம் ஒன்றில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
யு.என்.ஐ.