For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆராய டிரிப்யூனல் ஒன்றைமத்திய அரசு அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை கடந்த மாதம்தான் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குநீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.மகாஜன் தலைமையில் டிரிப்யூனல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த டிரிப்யூனல் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]