""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை வளர்ச்சிக்குப் பாடுபட மாறன் அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அதிக வளர்ச்சி காணவும் தக்க முயற்சிகளை மேற்கொள்ளும்படிமேற்காசியாவில் உள்ள இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி கேட்டுக் கொண்டார்.
மேற்காசியாவில் ஈரான், ஈராக், பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகளில் உள்ள இந்தியவர்த்தகப் பிரதிநிதிகளை முரசொலி மாறன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
மேற்காசிய நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் இந்தியா மேலும் வளர்ச்சி அடையவும்புதிய முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாக அக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாறன் பேசியதாவது:
நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 18 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இந்தியாவில் வெளிநாடுகளில் முதலீடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
நடப்பு ஆண்டு முதல் ஓராண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடிக்கு நேரடி அன்னிய முதலீடு இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையை அறிவித்தது. அதன் மூலம் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கானஅறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் மாறன்.
யு.என்.ஐ.