தமிழகத்தில் இன்று
தி-ரு-ம-ண-ம-ா-ன--வ-ரு-டன் -தி-ரு-ம-ணம்: மகள், 5 உறவினர்களை சுட்டுக்கொன்றார் தந்தை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத் நகரில், திருமணமான வாலிபரைக் காதலித்து திருமணம் செய்த தன் பெண்ணையும், அவளது 5உறவினர்களையும் தந்தை சுட்டுக்கொன்றார்.
மத்திய பாகிஸ்தான் பகுதியில் நடந்ததாக வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில்பிரசுரிக்கப்பட்டிருந்தது.
ஷேகாப்புரா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஹஸ்மத். விவசாயம் செய்து வருபவர்.
இவரது பெண் ஏற்கனவே திருமணமான வாலிபர் ஒருவரைக் காதலித்து தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித்திருமணம் செய்து கொண்டார். இதனால் ஹஸ்மத் ஆத்திரமடைந்தார்.
இதனால் தன் மகள் உள்பட அவளது உறவினர்கள் அனைவரையும் கொலை செய்து விடுவது என்று திட்டமிட்டார்.
இதற்குத் துணையாக தன் மகனையும், தம்பியையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
அனைவரும் சேர்ந்து அவரது மகள், மகளின் பச்சிளங்குழந்தை, அவளது கணவர், கணவரது முதல் மனைவி,கணவரது பெற்றோர் ஆகியோரை சுட்டுக்கொன்றனர்.
ஏற்கனவே திருமணமான வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்தை அவமதித்ததுதொடர்பாக இப்படுகொலை செய்ததாகக் கூறினார்.
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.