கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சிறுபான்மையினர் மீது தாக்குதல்: மத்திய அரசின் நிலை என்ன?
சென்னை:
இந்தியா முழுவதிலும் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன, இதுதொடர்பாக என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிடுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு, ஹார்மோனி இந்தியா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அலி, தலைவர் என்.ராம் ஆகியோர் பிரதமருக்கு எழுதியுள்ளகடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தினர் மீது நடந்து வரும் தாக்குதல்களைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் நலனுக்கு அதுகுந்தகம் விளைவிப்பதாக அமைந்து விடும்.
நாடு முழுவதும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் மீது நடந்த தாக்குதல் குறித்து மாநில அரசுகளுடன் விவாதித்து இதுதொடர்பாக கூட்ட நடவடிக்கையில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
யு.என்.ஐ.