முரளிதரன் சுழலில் சுருண்டது பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 266ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்டின் மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டன் வாஸிம் அக்ரம் 78 ரன்கள் குவித்தார்.இலங்கையின் முத்தையா முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி 115 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53ரன்கள் எடுத்திருந்தது. அட்டபட்டு 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை தனது முதல்இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது இலங்கை அணி 60 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனிடம் மேலும் 8 விக்கெட்டுகள் உள்ளன.