For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இ-னி "ஸ்மார்ட் கார்டு" வ-டி-வில் வா-க-னங்-க-ளுக்-கு -ஆர்.சி. புத்-த-கம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

லாரி உள்ளிட்ட அனைத்து வர்த்தகப் போக்குவரத்துப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இனி ஸ்மார்ட் கார்டுவடிவில் ஆர்.சி. புத்தகமும், தேசிய உரிமமும் (நேஷனல் பெர்மிட்) வழங்கப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் ஜோஷி தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தற்போது வாகனங்களுக்கு புத்தக வடிவில் பதிவுப் புத்தகம் (ஆர்.சி.) வழங்கப்படுகிறது. இனி இப் புத்தகங்கள்ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும். இதை எளிதில் எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கும் எடுத்துச் செல்லமுடியும்.போலிகள் தயாரிக்க முடியாது.

தற்போது போட்டோ லேமினேஷன் செய்து தரப்படும் வாகன உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) போன்று இக் கார்டுஇருக்கும். ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஸ்மார்ட் கார்டை வடிவமைப்பது குறித்து முடிவு செய்ய இரு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழு ஸ்மார்ட்கார்டு தொடர்பான தொழில்நுட்பப் பணிகளையும், மற்றொரு குழு ஸ்மார்ட் கார்டு வடிவத்தை தேசிய அளவில்கண்காணிப்புப் பணியையும் மேற்கொள்ளும்.

அடுத்த 6 மாதத்தில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இரு கமிட்டிகளும் 3 மாதத்துக்குள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மாதத்தில் இத் திட்டம் எப்படி செயல்படும் என்று சோதிக்கப்படும் என்றார்ஜோஷி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X