நான் விலக மாட்டேன்: அஸாருதீன் பிடி-வா-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக மாட்டேன் என்று முன்னாள் கேப்டன்அஸாருதீன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளநீதிபதி கிங் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தில், இந்திய வீரர் அஸாருதீன்தான்,கிரிக்கெட் புக்கி ஒருவரை தனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடமிருந்து பணம்வாங்கினேன் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்குரேனியே வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அஸாருதீன் அணியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைவலுத்தது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் தின்சா வெள்ளிக்கிழமைகூறுகையில், தார்மீகப் பொறுப்பேற்று, தன் மீதான புகார் தவறென்று நிரூபிக்கப்படும்வரை அஸாருதீன் அணியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அணியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அஸாருதீன்திட்டவட்டமாக கூறியுள்ளார். அஸாருதீன் கூறுகையில், குரோனியே அவ்வப்போதுதனது நிலையை மாற்றிப் பேசி வருகிறார். இப்படிப்பட்ட நபரின் அறிக்கையைப்பெரிதாகக் கருதி, அமைச்சர் தின்சா எப்படி நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகூறலாம்?
குரோனியேவின் புகாருக்கு ஆதாரம் எதையும் அமைச்சர் வைத்துள்ளாரா?
நான் சிறுபான்மை இனத்தவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை ஓரம் கட்ட முயற்சிநடக்கிறது. கிரிக்கெட் எனது மூச்சு. எனது வாழ்க்கை. எனது கொள்கை. அதை விடுவதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை.
இதேபோல, கபில்தேவும் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று ஒரு பத்திரிகை ஆசிரியர், தனியார் தொலைக் காட்சியில் கூறியதுவேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
விசாரணை ஏதும் வைக்காமலேயே ஒருவரைத் தண்டிப்பது, அவருக்கு நிரூபிப்பதற்குவாய்ப்பு தராதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கபில்தேவை ராஜினாமா செய்யச்சொல்லும் பத்திரிகை ஆசிரியர், சட்டம் தெரியாதவராக இருக்கலாம். தவறுநிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளி என்று கூற முடியாது என சட்டம்கூறுகிறது. இதை அந்த ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அஸாருதீன்.
யு.என்.ஐ.