தமிழகத்தில் இன்று
நடுக்கடலில் தவிக்கும் 42 அகதிகளைக் காக்கக் கோரி தந்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் பரிதவித்துக் கொண்டிருக்கும் 42 இலங்கைத் தமிழ்அகதிகளைக் காப்பாற்றக் கோரி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியனரும்சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தந்திகள் அனுப்பியுள்ளனர்.
இலங்கை எல்லைக்குள் 6-ம் தீவுப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக 42 இலங்கைத்தமிழ் அகதிகள் நடுக்கடலில் சிக்கி, தவித்துக் கொண்டுள்ளனர். இவர்களை மீட்கஇந்திய அதிகாரிகளால் முடியாத நிலை.
இந்த நிலையில், அகதிகள் நிலை குறித்து விவாதிக்க ராமேஸ்வரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டிருந்தது. இக்கூட்டத்தின் இறுதியில் இலங்கைஅரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து அகதிகளின் உயிரைக் காக்க செஞ்சிலுவைச் சங்கம்வற்புறுத்த வேண்டும் என்று கோரி தந்திகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கும் இதுதொடர்பாக தந்திகள் அனுப்பப்பட்டன.
அகதிகள் சிக்கியுள்ள கடல்பகுதிக்குச் சென்று வந்த தமிழக மீனவர்கள் கூறுகையில்,அகதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாகதெரிவித்தனர்.
யு.என்.ஐ.