கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சார்லசா...வில்லியமா...?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
இங்கிலாந்தின் அடுத்த மன்னராக இளவரசர் சார்லஸ், அவரது மகன் வில்லியம் ஆகியோரில் யார் வருவதுஎன்பதில் இங்கிலாந்து மக்கள் சரி பாதியாக பிரிந்துள்ளனர்.
லண்டனில் வெளியாகும் சன்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அடுத்த இங்கிலாந்து மன்னர் யார் என்பது குறித்து 1004பேரிடம் கருத்து கேட்டது. அதில் 44 சதவீதம் பேர் சார்லசுக்கு ஆதரவாகவும், அதே சதவீதம் பேர் சார்லசின் மகன்வில்லியமுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த மாதத்துடன் 18 வயதாகும் வில்லியம் தான் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவார் என்று கருதும் 64சதவீத பிரிட்டன் மக்கள், ராணி எலிசபத் பதவி விலகிவிட்டு இளவரசர் வில்லியமை பிரிட்டன் இளவரசராக்கவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
பிரிட்டனில் வாழும் 75 சதவீதம் மக்கள் அங்கே அரச பரம்பரை நீடிக்க வேண்டும் என்றும், வில்லியம் மன்னராகவேண்டும் என்றும் கூறினர். ஆனால் 25 சதவீதம் பேர் பிரிட்டனில் அரசாட்சிக்கு எலிசபெத் ராணியுடன்முடிவுகட்ட வேண்டும் என்று கருதுகின்றனர்.
58 சதவீத மக்கள் பிரிட்டனை ஆளும் அரச பரம்பரையினர் நாட்டின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மீறி சிறப்பாகஆட்சி புரிகிறார்கள் என்று கருத்துதெரிவித்தனர்.