கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிரான்ஸில் தேர்தல்... புதுவையில் வாக்குப் பதிவு...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு நடக்கும் தேர்தலையடுத்து பாண்டிச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமைவாக்களித்தனர்.
பாண்டிச்சேரியில் 7000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வசிக்கிறார்கள். பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலையொட்டிபாண்டிச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடிமக்களுக்காக தனியாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி பாண்டிச்சேரியில் துபாஜிலி கலின்டே மற்றும் ஆரோக்கியசாமி உள்பட 5வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் முடிவுகள் வெளியாகும்.
வாக்குப்பதிவு மிக அமைதியாக நடந்தது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
யு.என்.ஐ.