லாராவிடம் விசாரிப்போம்...மேற்கிந்தியத் தீவு வாரியம் கூறுகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பர்மிங்ஹாம்:
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக பிரையன் லாராவிடம் விசாரணை நடத்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வாரியத்தின் தலைவர் பார்ரிக் ரொசியாவ் கூறியதாவது:
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச் பிக்ஸிங்கில் லாரா ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகமுழுமையான விசாரணை நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே இது குறித்து லாராவிடம் கேட்டபோது குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள்அணி மீது எந்த களங்கமும் இருக்கக்கூடாது என்று விரும்புவதால், இது பற்றி மேலும் தீவிர விசாரணை நடத்தப்படும். லாராவிடமும் மீண்டும் விசாரணைநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
லாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வரை அவருக்கு கிரிக்கெட் வாரியத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு என்றார்பாட்ரிக்.