தமிழகத்தில் இன்று
நஷ்டத்தைக் குறைக்க "செயில் நிறுவனம் முடிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்கத்தா:
மத்திய அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் (செயில்), நடப்பு நிதியாண்டில் தனது நஷ்டத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் பான்டே கூறியதாவது:
செய்ல் நிறுவனம் கடந்த இரு ஆண்டுகளாக கஷ்டத்தில் இயங்கி வருகிறது. தற்போது இந் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தில் பாதியளவை நடப்பு நிதியாண்டில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டில் மட்டும் செய்ல் நிறுவனத்துக்கு ரூ.1720 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதுமேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளால் நஷ்டம் ஏற்படுவது குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் லாபம் கிடைத்துள்ளது. இதே நிலை நீடித்தால், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை நடப்பு நிதியாண்டில் பாதியாகக்குறைக்க முடியும் என்றார் பான்டே.
யு.என்.ஐ.