தமிழகத்தில் இன்று
வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வேலை கிடைத்து அல்லது வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைகடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இது தொடர்பாக, குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 3 ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அதன் பாதி அளவிலான எண்ணிக்கையில்தான் இந்தியர்கள்வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
1997-ம் ஆண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டு குடியேற்றத் துறைக்கு 4.16 லட்சம் பேர்விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 1999-ம் ஆண்டில் 1.99 லட்சமாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் 80 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளுக்குத்தான்செல்கின்றனர். ஆனால், தற்போது வளைகுடா நாடுகளில் பொருளாதார இறக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குவேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால், அங்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கைகுறைந்துவிட்டது. இதனால், இந்தியாவிலிருந்து செல்பவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
கேரளத்திலிருந்துதான் அதிக அளவில் ஆட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். 1999-ம் ஆண்டுவெளிநாடுகளுக்குச் சென்ற 1.99 லட்சம் பேரில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 60,445 பேர் ஆவர்.கர்நாடகத்திலிருந்துதான் மிகக் குறைந்த அளவில் ஆட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
யு.என்.ஐ.