For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிவியல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியர் யஷ்பால் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தர பேராசிரியரும் அறிவியல் செய்திகளைத் தொகுத்துவழங்குபவருமான யஷ்பால் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் நடைபெற்ற நவீன உலகில் அறிவியல் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டுக்கு எதிரான சவால்கள்தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

இப்போது எல்லோரும் தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது மிகவும் கவலைஅளிக்கும் விஷயமாகும். உலகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் தொழில்நுட்பம் தேவைதான். ஆனால், அதுவே எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வாக இருக்காது.

தகவல் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதால், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வியின் முக்கியத்துவம் மறக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது கல்வி அறிவை மேலும்செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு ஊக்குவிக்கிதான். ஆனால், அதுவே கல்வி அறிவு ஆகிவிடாது. பில்கேட்ஸையும், ஐன்ஸ்டீனையும் ஒருபோதும் இணைத்துப் பேசமுடியாது. கூடாது. அது மிகவும் தவறு.

தற்போது வளரும் தலைமுறையினரும் தகவல் தொழில்நுட்ப மாயையில் விழுந்துள்ளனர். அடிப்படைஅறிவியலுக்கும், பொறியியல் கல்விக்கும் இப்போது யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. எதிர்காலத்தில் இது பெரியபாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்படியே சென்றால் ஒரு காலத்தில் சொந்தமாக சிந்திக்கும் திறமையே இல்லாமல்போய்விடும். அதன் பிறகு ஒருவருடைய தனித் திறமையை வைத்து மற்றொருவர் தனது அறிவை வளர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் தொழிலில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக வருமானம் கிடைப்பதால்அதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு வகையான அடிமைத்தனமானது. இதில் அறிவுக்கு எந்தவேலையும் இல்லை. ஆனால், இதை யாரும் யோசிக்கவில்லை என்றார் யஷ்பால்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X