மன்-னிப்-பு கேட்-டார் அசாருதீன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்கு தான் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவன் என்பதுதான் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள்கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியின் வீரருமான முகம்மதுஅசாருதீன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், நான் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் என் மீது சரமாரியாககுற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று அசாருதீன் கூறினார். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.அசாருதீன் கூறிய கருத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அசாருதீன் கூறியுள்ளார். மனதில் எதையும்வைத்துக் கொண்டு நான் அவ்வாறு கூறவில்லை. விசாரணைக்குப் பயந்தும் அப்படி கூறவில்லை. என் மீதுசரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவ்வாறு கூறினேன்.மற்றபடி நான் கூறியதற்கு வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை.
நான் கூறிய கருத்துக்களால் எவருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிப்பதுடன்மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அசாருதீன்.
யு.என்.ஐ.