இந்-தி-யா-வுக்-கு அ-னுப்-பப்-ப-ப-டு-வா-ரா குரோனியே?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜொகானெஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணைக்கு குரோனியேவை அனுப்பி வைக்கும்படி இந்தியாவிடமிருந்து எந்தகோரிக்கையும் வரவில்லை என்று தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து,கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார்.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக தனி விசாரணைக் கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்துவிசாரித்து வருகிறது. குரோனியேவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணைக்கு குரோனியேவை தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படிஇந்தியா கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இச் செய்தியை தென் ஆப்பிரிக்க அரசு செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கோ, இந்தியாவுக்கான தென் ஆப்பிரிக்க தூதருக்கோ இதுதொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.