"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளுடன் சகதியில் சிக்கிய வேன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருவனந்தபுரம்:
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற வேன் சகதியில் சிக்கிக்கொண்டது. கேரளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.
மைசூரில் உள்ள அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்நோட்டுக்களை எடுத்துக்கொண்டு 4 வாகனங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ்வங்கிக்குச் சென்று கொண்டிருந்தன. வாகனங்களுக்குப் பாதுகாப்பாக துப்பாக்கிஏந்திய வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.
திருவனந்தபுரத்துக்கு அருகே போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த சாலையில் 4வாகனங்கள் தெரியாமல் சென்று கொண்டிருந்தன. பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. பாதி வழியில், 4 வாகனங்களில் ஒன்றான பெரிய வேன் சகதியில்சிக்கிக் கொண்டது.
எவ்வளவோ முயன்றும் வேனை வெளியே எடுக்க முடியவில்லை. கோடிக்கணக்கானரூபாய் நோட்டுக்களுடன் வேன் இப்படி சகதியில் சிக்கிக் கொண்டதை அடுத்துபாதுகாப்புக்கு வந்த வீரர்கள் பயந்தனர்.
பின்னர் அந்த வேனில் இருந்த பணத்தை எல்லாம் மற்றொரு வேனில் வைத்துஅவர்கள் எடுத்து வந்தனர். புதன்கிழமை காலை பணத்துடன் வேன்கள் மூன்றும்வங்கிக்கு வந்து சேர்ந்தன.
வேன்களில் எவ்வளவு பணம் எடுத்து வரப்பட்டது என்பதை வங்கி அதிகாரிகள்தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
யு.என்.ஐ.