அசாருதீனை இரண்டரை மணி நேரம் கு-டைந்-த சிபிஐ அ-தி-கா-ரி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையஅணி வீரருமான முகம்மது அசாருதீனிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீப காலமாகபலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அசாருதீன்வந்தார். அவரிடம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சுமார் இரண்டரை மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக முதன்முறையாக இப்போதுதான் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தியுள்ளனர்.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ஹான்சி குரோனியே, அந் நாட்டு விசாரணைக் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, எனக்கு எதுவும்தெரியாது. கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை என்னிடம் முதலில் அறிமுகப்படுத்தியது அசாருதீன் தான் என்று அவர்குறிப்பிட்டார்.
குரோனியே கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தவிர,எனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் தர கபில் தேவ் முன்வந்ததாகவும் அது பற்றி அப்போது இந்திய அணியின்கேப்டனாக இருந்த அசாருதீனிடம் தெரிவித்ததாகவும் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார். இது பற்றியும்அசாருதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பல முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்களிடம் மனோஜ் பிரபாகர் ரகசிய வீடியோ பேட்டிஎடுத்துள்ளார். அதில், அசாருதீன் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக பலவிதமான கருத்துக்களை வீரர்கள்தெரிவித்துள்ளனர். இவை பற்றியும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஏற்கெனவே, அஜிக் வடேகர் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோரிடம் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் தவிர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரசாந்த் வைத்யா, நயன்மோங்கியா மற்றும் ஐ.எஸ். பிந்த்ரா, சுனில் தேவ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.