For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்-கை-பாகிஸ்-தான் -கி-ரிக்-கெட்: சயீத் அன்வர் - இன்சமாம் சதம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்லே:

இலங்கைக்கு எதிராக கல்லேயில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான் வலுவானநிலையில் உள்ளது.

டெஸ்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 341ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையை விட 160 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் உள்ளது.

முன்னதாக 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை பாகிஸ்தான்தொடர்ந்தது. முரளிதரன் தவிர இலங்கை அணியின் மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் சரியாக பந்து வீசவில்லை.இதனால், பாகிஸ்தான் அணி வீரர்கள் எளிதாக ரன்கள் குவித்தனர்.

இன்சமாம் உல் ஹக்கும், சயீத் அன்வரும் சிறப்பாக அடி சதமடித்தனர். இன்சமாம் 112 ரன்களும், அன்வர் 123ரன்களும் எடுத்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர். யூசுப் யுகானா 41 ரன்கள் எடுத்துஅவுட்டானார்.

ஆட்ட நேர முடிவில் யூனிஸ் கான் 24 ரன்களுடனும், அப்துர் ரஸாக் 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல்இருந்தனர். இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X