அசாருதீனுக்கு எதிராக குரோனியேவிடம் ஆதாரமும் இல்லை"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மொகம்மது அசாருதீன் உள்பட எந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் குரோனியேவிடம் எந்தஆதாரமும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் ஜான் டிக்கின்சன் கூறியுள்ளர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி எட்வின் கிங் தலைமையிலான விசாரணைக் கமிஷன் முன் கடந்தமூன்று நாட்களாக குரோனியேவிடம் நீதிபதி குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மற்றும் சில இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடன் தனக்கு இருந்த தொடர்பு ஆகியவற்றையும், எவ்வளவு லஞ்சம் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நீதிபதியிடம்குரோனியே தெரிவித்தார்.
இந் நிலையில், தொலைக்காட்சி செய்தி நிறுவனத்துக்கு குரோனியேவின் வழக்கறிஞர் பேட்டியளித்தார். அப்போது, அசாருதீன் உள்பட இந்திய கிரிக்கெட்வீரர்களுக்கு மேட்ச் பிக்ஸிங் உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் குரோனியேவிடம் இல்லை என்று அவர் கூறினார்.
அசாருதீன் உள்பட மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் மீது குரோனியே குற்றம் சாட்டியிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவரிடம்இல்லை. மேலும், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக குரோனியேவுக்கு எதுவும் தெரியாது என்றார் அவர்.
யு.என். ஐ.