For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பெட்ரோலிய உற்பத்தியில் இந்-தி-யா தன்னிறைவு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

இன்னும் இரண்டாண்டுகளில், காஸ், மண்ணென்ணைய் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்னுசாமி கூறினார்.

மதுரையில் நிருபர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் பிரதமர் குஜ்ரால் அரசு எடுத்த தீர்மானத்தின் படிகாஸ், மண்ணெண்ணைய்களுக்கு தரப்படும் மானியம் படிப்படியாக 2002 - ம் ஆண்டுக்குள் விலக்கிக் கொள்ளப்படும்.

பெட்ரோலிய மானியத்தினால் வருடத்துக்கு 6,300 கோடிரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு பாரல் கச்சா எண்ணெய் 10 டாலருக்கு இருந்தது.தற்பொழுது 28 டாலர் விலைக்கு கிடைக்கிறது.

பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் பெட்ரோல் விலை கீழே இறங்கி விடும் என்று கூறி உள்ளன. அப்படி விலை இறங்கும் நேரத்தில் லாபத்தில்நுகர்வோருக்கு பங்கு தரப்படும்.

இந்தியாவில் 25 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 18 ஆயிரம் கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12வெளிநாட்டு கம்பெனிகளும் 7 இந்திய கம்பெனிகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. கூடிய விரைவில் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வதில்தன்னிறைவு அடைந்துவிடுவோம்.

சென்னையில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு 2002 ம் ஆண்டுக்குள் முடிவடையும். மங்களூர் - கரூர் எரிவாயு குழாய் அமைக்கும் பணி முடிவடையும்தருவாயில் உள்ளது. இதற்கு 22 ஆயிரம் கோடிரூபாய் செலவாகும்.

காஸ் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் தமிழ்நாட்டில் பத்து இருக்கிறது. மேலும் வந்தவாசி, திண்டிவனம், விருத்தாச்சலம், மதுரை,திருநெல்வேலிஉள்பட 10 இடங்களில் இந்த நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கு 25 கோடிமுதல் முப்பது கோடிரூபாய் வரை செலவாகும் என்றுதெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்னுசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X