தமிழகத்தில் இன்று
மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே மின்சாரம் தாக்கி இருவர் இறந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பால்விற்பனைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கத்துறை மெயின்ரோட்டில்ஒரு மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. வயர் மீது ஆறுமுகத்தின் கால் பட்டுள்ளது.இதையடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
அலறியபடி கீழே விழுந்து மயக்கமடைந்தார் ஆறுமுகம். இவரது சத்தம் கேட்டு,அருகில் இருந்த ராயப்பகவுண்டர் (52) என்பவர் ஆறுமுகத்தைக் காப்பாற்ற நினைத்துஅவரை இழுத்துள்ளார். இதனால் அவரும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார்.
மின்வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு , இருவரும் மீட்கப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றிஇருவரும் இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.