"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
சிறுபான்மையினர் தாக்குதலைக் கண்டிக்க மேடை ஏறுகின்றனர் ஜெ., மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் ஜுலை 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஒரே மேடையில் ஜெயலலிதா , மூப்பனார்,இளங்கோவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசுகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள இளங்கோவன், சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்தச்சந்திப்பு தி. நதரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பினனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு உறுப்பினர் என், வரதராஜன் கூறுகையில்,சிறுபான்மை மக்கள்மீது சமீபகாலமாக நடந்து வரும் தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல் கட்டமாக சென்னை பனகல் பூங்காவில் ஜுலை 6ம் தேதி மிகப் பெரிய கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துகிறோம். தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் முன்னின்று நடத்தும் இந்த கூட்ட்த்தில் அ.தி.மு.க. பொதுச் செய்லாளர் ஜெயலலிதா, த.மா.கா தலைவர் மூப்பனார். தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு மார்க்சிஸ்ட் செயலாளர் சங்கரய்யா ஆகியோர் பேசுகின்றனர்.
தி.க. தலைவர் வீரமணி உள்பட மற்ற தலைவர்களையும் அழைத்துள்ளோம். இப்போதுள்ள சூழ்நிலையில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து செய்ல்படுத்துவதுநல்லது என்றார் அவர்.