"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
கிளாஸ்கோ:
எதிர்த்து விளையாடி வீரரை 38 விநாடிகளில் வீழ்த்தி ரூ.35 கோடியை வென்றார் முன்னாள் உலக ஹெவி வெயிட்குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன்.
லண்டனில் மைக் டைசனுக்கும் சக நாட்டவரான லோ சாவரெஸிக்கும் சனிக்கிழமை குத்துச் சண்டை போட்டிநடைபெற்றது. இதில் போட்டி துவங்கிய 38 விநாடிகளில் லோ சாவரெஸிஸை வீழ்த்தி மைக் டைசன் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பரிசுத் தொகையாக ரூ.35 கோடியை மைக் டைசன் வென்றார். அத்துடன் தனதுவெற்றி-தோல்வி கணக்கை 48-3 ஆகவும் உயர்த்திக் கொண்டார். தோற்ற லோ சாவரெஸிக்கு ரூ.3.75 கோடிகிடைத்தது.
வெற்றிக்குப் பிறகு நிருபர்களிடம் மைக் டைசன் கூறியதாவது:
நான் இரக்கமில்லாத, கொடுமையான குத்துச் சண்டை சாம்பியன். முன்னாள் சாம்பியன்கள் சோனி லிஸ்டன், ஜாக்டெம்ப்ஸெ போன்ற வீரர்களுக்குச் சமமானவன். எனக்கு ஈடு யாரும் இல்லை.
தற்போது உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியனாக உள்ள லெனாக்ஸ் லூயிஸுடன் போட்டியிடவிரும்புகிறேன். அவரிடமிருந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்லத் துடிக்கிறேன். ஆனால், உடனடியாகஅவருடன் மோத நான் இப்போதைக்குத் தயாராக இல்லை.
எனக்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. நான் இப்போது தளர்வடைந்துள்ளேன். நான் மீண்டும் தயாராக சிலகாலம் பிடிக்கும். நான் போட்டிக்குத் தயாராகிவிட்டால் என்னை யாரும் வீழ்த்தமுடியாது என்றார் டைசன்.
கற்பழிப்புக்குப் குற்றத்துக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மைக் டைசன். தற்போது லோ சாவரெஸியுடன்மோத மைக் டைசனுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.