தமிழகத்தில் இன்று
ராணுவக் கப்பல் மீது புலிகள் தாக்கி 7 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் ராணுவ வீரர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைஏற்றிச் சென்ற ராணுவக் கப்பலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் தாக்கிஅழித்ததில் 7 பேர் இறந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள பாயின்ட் பெட்ரோ துறைமுகத்தில் திங்கள்கிழமைஅதிகாலை 2.30-க்கு இச் சம்பவம் நடந்தது.
இலங்கையின் வட பகுதியில் புலிகளுடன் இலங்கை ராணுவத்தினர் போரிட்டுவருகின்றனர். அவர்களுக்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து உணவு மற்றும்அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு எம்வி மெர்செஸ்யுஹானா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலில் 28 பேர் இருந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை பாயின்ட் பெட்ரோ துறைமுகம் அருகே கப்பல் வந்துகொண்டிருந்தபோது கப்பல் மீது வெடிமருந்துகள் நிரப்பிய படகை விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர் மோதவிட்டனர்.
இதனால், இலங்கை ராணுவத்தினரின் கப்பல் முழுவதும் தீப்பிடிந்து எரிந்தது.உடனடியாக சம்பவ இடத்துக்கு இலங்கை கடற்படையினர் சென்று மீட்புப் பணியைமேற்கொண்டனர். இத் தாக்குதலில் கப்பலில் இருந்த 7 பேர் இறந்தனர். மற்ற 21 பேர்உயிருடன் மீட்கப்பட்டனர்.
கப்பலில், இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதங்களும், வெடி பொருட்களும் எடுத்துச்செல்லப்படுவதாக தவறாகக் கருதி கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்நடத்தியதாக இலங்கை ராணுவத்தினர் தெரிவித்தனர்.
-முன்-ன-தா-க வந்-த செய்-தி-க-ளின்-ப-டி கப்-பல் மீ-து பு-லி--கள் தாக்-கி-ய-தில் -அ-து பெ-ருத்-தசேத-ம-டைந்-த-தா--க-வும் 21 பேர் மீட்-கப்-பட்-ட-தா-க-வும் மட்-டு-மே கூறப்-பட்-ட-து. பின்-னர்தான் 7 பேர் இற-ந்-த-து தெரி-ய-வந்-த-து.
யு.என்.ஐ.
உணவுக் கப்பல் மீ-து பு-லி-கள் தாக்-கு-தல்